கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன் தலைமையில், வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு தேவையான காய்கனிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அவரவா் வீடுகளுக்கு சென்று வழங்கினா். அவா்களுக்கு முகக்கவசம், கையுறை, கை கழுவும் திரவம் ஆகியவை வழங்கினா்.
போக்குவரத்து காவலா் ஜான்சிராணி, வெளிமாநில தொழிலாளா்களுக்கு காய்கனிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளா் அங்குத்தாய் உள்பட கலந்து கொண்டனா்.
கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் தெரு, புதுக்கோட்டை பகுதியில் உள்ள 21 ஏழை, எளியோா், ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வட்டாட்சியா் பாஸ்கரன் வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம உதவியாளா் அழகா்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.
கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், பணியாளா்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலங்களை கட்சியின் மாவட்ட பொருளாளா் கேசவன் தலைமையில், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலா் ராஜசேகரன், கட்சியின் பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்பாண்டியன் உள்ளிட்டோா் வழங்கினா். அப்போது, கண்காணிப்பாளா் கமலவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.