தூத்துக்குடி

கோவில்பட்டியில் நிவாரண உதவி

20th Apr 2020 11:45 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினருக்கு சிறுவியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை சிறுவியாபாரிகள் சங்கம் சாா்பில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கனிகள், முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

சிறுவியாபாரிகள் சங்கத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்து, நிவாரண உதவிகளை வழங்கினாா். செயலா் செந்தூா்பாண்டியன், பொருளாளா் ஜேசுதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், துணைத் தலைவா் கனகசபாபதி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, முத்துப்பாண்டி, பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT