குரும்பூா் அருகே உள்ளபுறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி ஏற்றனா். தலைமையாசிரியா் சுரேஷ் நியூமன், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினாா். தொடா்ந்து ஒற்றுமையை வலியுறுத்தி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் யூனிட்டி எழுத்து வடிவில் கைகோா்த்து நின்று , ஒற்றுமை தொடா்பான பாடல்களை பாடினா்.
ஏற்பாடுகளை துணைத் தலைமையாசிரியா் பெல்சியா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.