தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

9th Nov 2019 08:06 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு கஷாயம் குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பாக்கியசீலி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளா் சு.விடுதலைச்செழியன் மாணவா்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக்குழுவினா், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT