திருச்செந்தூர் வட்டம், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளியில் 7 மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வில், இப் பள்ளியைச் சேர்ந்த முத்துதிவ்யா, சிபி, சிவபாலன், மதன், இசக்கி மணி, ரித்திக் மற்றும் இன்பராஜலிங்கம் ஆகிய 7 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற இம் மாணவர், மாணவிகளை பள்ளிச் செயலர் ராஜேந்திரசாமி, ஆலோசகர் ஜெயஆதித்தன், தலைமை ஆசிரியர் ஆபேத்நேகோ, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் காத்தவராஜன், ஆசிரியர்கள் மாதவன், நிர்மலா தேவி, நித்யா, ராஜலட்சுமி மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.