தேசிய திறனாய்வுத் தேர்வில் கருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில் இப் பள்ளி மாணவர் இரா. அன்புசெல்வம் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவரை தலைமையாசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.