கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் முத்து தலைமை வகித்தார். திருமலை முத்துக்குமார் வரவேற்றார். செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் மாரிச்சாமி வரவு- செலவு அறிக்ககையை சமர்ப்பித்தார். கூட்டத்தில், இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், அத்தியாவசிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பொங்கல் திருநாளன்று தமது பகுதியில் குடியிருக்கும் மாணவர், மாணவிகளில் அரசுப் பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், செயல் தலைவராக சி.முத்து, இணைச் செயலராக ஏ.கே.முத்து, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பெரியசாமி, கருப்பசாமி, ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.