ஆறுமுகனேரி பூங்காவில் இறந்து கிடந்தவர் உப்பளத் தொழிலாளி
ஆறுமுகனேரி பூங்காவில் இறந்துகிடந்தவர், உப்பளத் தொழிலாளி என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
ஆறுமுகனேரி பஜார் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பூங்காவில் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். விசாரணையில், அவர், ஆறுமுகனேரி காமராஜபுரம் வேதக்கோயில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சித்திரைப்பாண்டி (54) என்பதும், உப்பளத் தொழிலாளியான இவர்,உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்தது.
திங்கள்கிழமை மருத்துவமனையில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் ஆறுமுகனேரிக்கு வந்த அவர் செவ்வாய்க்கிழமை பூங்காவில் இறந்து கிடந்தது தெரியவந்தது.