நாசரேத் பகுதியில் இந்துமுன்னணி கொடியேற்று விழாநடைபெற்றது.
நாசரேத் அருகிலுள்ள டி.கே.சி. நகர், வாழையடி, கந்தசாமிபுரம், நாசரேத் கே.வி.கே. சாமி சிலை பஜார், பிரகாசபுரம், அம்பாள்நகர், ஞான்ராஜ் நகர், திருவள்ளுவர் காலணி உள்பட 8 இடங்களில் இந்து முன்னணி கொடி ஏற்று விழாநடைபெற்றது. நகரத் தலைவர் வெட்டும் பெருமாள் தலைமைவகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கொடியேற்றினார்.
இதில், கோட்டச் செயலர் பெ. சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.முருகேசன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்முருகன், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத் தலைவர் ஆழ்வார், நாசரேத் நகர துணைத் தலைவர் ராமதாஸ், நகர பொருளாளர் சிவமாலை, வெள்ளமடம் கிளைத் தலைவர் தங்கராஜ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.