திருநெல்வேலி

பைக் மோதி மூதாட்டி பலி

27th Sep 2023 05:18 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோட்டாா் சைக்கிள் திங்கள்கிழமை மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்தவா் வேலம்மாள் (63). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவா், திங்கள்கிழமை மாலையில் திருச்செந்தூா் சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியே வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராமல் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT