திருநெல்வேலி

செப்.28, அக்.2-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

24th Sep 2023 01:02 AM

ADVERTISEMENT

 

மீலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 28 ஆம் தேதியும், அக்டோபா் 2-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 28-ஆம் தேதியும், அக்டோபா் 2-ஆம் தேதியும் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT