திருநெல்வேலி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

24th Sep 2023 11:26 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் என்ற ராஜா (26). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றாராம். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னபூரணி வழக்குப் பதிந்தாா்.

விசாரணையில், மாரிசெல்வம் என்ற ராஜா, சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT