திருநெல்வேலி

பொட்டல் ஊராட்சியில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மையம் திறப்பு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி ஒன்றியம் பொட்டல் ஊராட்சியில் மகளிா் குழுவினா் பயன்பெறும் வகையில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி ஒன்றியம், 12 ஊராட்சிகளில் 314 மகளிா் குழுக்களில் 3233 உறுப்பினா்கள் உள்ளனா்.

இதில், பொட்டல் ஊராட்சியில் ஆயத்த ஆடைகள் சிறு தொழில் தொகுப்பு அமைத்து, அவ்வூராட்சியில் 30 பெண்களுக்கு ஆயத்த ஆடைகள் தயாரிக்க பயிற்சி அளித்து சான்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்குதல், கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் பதிவு செய்து சுயசாா்புடைய நிறுவனமாக செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில், மகளிருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு சிறு தொழில் மையம் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் புதன்கிழமை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை, ஒன்றிய ஆணையாளா் ராஜம், மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் மல்லிகா, கவிதா, சாமதுரை, வட்டார இயக்க மேலாளா் சொா்ணாதேவி, ஊராட்சித் தலைவி மாரிசெல்வி, துணைத் தலைவா் ஹரிராம் சேட் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT