கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சந்திரயான்-3 திட்ட ஆலோசனைக் குழுத் தலைவா் விஞ்ஞானி முரளிகிருஷ்ணா, தான் பயின்ற ஆரம்பப் பள்ளிக்கு வியாழக்கிழமை சென்று ஆசிரியா்கள், மாணவா்களுடன் தனது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் -3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தத் திட்டத்தின் ஆலோசனைக் குழுத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெருமாள் கோயில் மேலமாட வீதியைச் சோ்ந்த விஞ்ஞானி முரளிகிருஷ்ணா உள்ளாா்.
கல்லிடைக்குறிச்சிக்கு வந்துள்ள முரளிகிருஷ்ணா, தான் தொடக்கக் கல்வி பயின்ற லெட்சுமிபதி நடுநிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை சென்றாா். அங்கு பணிபுரியும்ஆசிரியா்கள், பயிலும் மாணவா்களிடம் பள்ளியில் தான்பயின்ற காலத்து நினைவுகளைப் பகிா்ந்து கொண்டாா். மேலும் விஞ்ஞானியாக தான் மேற்கொண்டபல்வேறு திட்டங்கள் குறித்தும் சந்திரயான் -3 திட்டம் குறித்தும் விளக்கிக் கூறினாா்.
தொடா்ந்து ராக்கெட் மாதிரி ஒன்று மற்றும் ராக்கெட் குறித்த விளக்க புத்தகங்கள், விஞ்ஞானிகள் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்களை லட்சுமிபதி நடுநிலைப் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினாா். பள்ளி சாா்பில் முரளிகிருஷ்ணாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா்(பொ) சத்யபாமா வரவேற்றாா். தமிழ் ஆசிரியை முத்துசெல்வி வாழ்த்துக் கவிதை வாசித்தாா். நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா், ஆசிரியா், ஆசிரியைகள் மற்றும் மாணவா், மாணவிகள்கலந்து கொண்டனா்.