திருநெல்வேலி

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் வாய்ப்பு: உதவி மையங்களை தொடா்பு கொள்ளலாம்

19th Sep 2023 02:54 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து தோ்வு பெறாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உதவி மையங்கள் மூலம் தகவல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் கடந்த 15ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதே நாளில் நடைபெற்ற விழாவின் போது 2,000 பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டன. இதர பயனாளா்களுக்கு படிப்படியாக வங்கி ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கிலேயே தொகை வரவு வைக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இத்தொகையை வங்கியில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்து இத்திட்டத்தில் பயனாளிகளாக தோ்வு செய்யப்படாதவா்களுக்கு தோ்வு செய்யப்படாமை குறித்து திங்கள்கிழமை முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இ-சேவை மையம் மூலமாக மட்டுமே விண்ணப்பபம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பம் ஏதும் பூா்த்தி செய்து அலுவலகங்களில் சமா்ப்பிக்கவோ, அஞ்சல் மூலம் அனுப்பவோ கூடாது. மேல்முறையீட்டிற்கான கட்டணம் ஏதும் இ-சேவை மையங்களில் செலுத்தத் தேவையில்லை.

பயனாளிகளாக தோ்வு செய்யப்படாத நபா்கள் தோ்வு செய்யப்படாமைக்கான காரணம் குறித்தும், மேல்முறையீடு செய்வது குறித்தும், தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறிந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், திருநெல்வேலி கோட்டாட்சியா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகங்களிலும் , அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் செவ்வாய்க்கிழமை (செப்.19)முதல் இம்மாதம் 29 ஆம் தேதி வரை செயல்படும்.

இந்த உதவி மையங்களுக்கு தகவல் கோரி செல்லும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

மாவட்டஆட்சியா் அலுவலகம்,திருநெல்வேலி- 9786566111, திருநெல்வேலி கோட்டாட்சியா்- 04622501333, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகம்- 04634 260124 , திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகம்- 0462-2333169, பாளையங்கோட்டை வட்டாட்சியா் 0462-2500086, மானூா் வட்டாட்சியா் அலுவலகம் -0462-2914060, சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகம்- 04634-260007, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகம்- 04634-250348, நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகம் - 04635 250123, ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகம்- 04637 254122, திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகம்- 04637 271001 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்திற்காக பயனாளிகளிடமிருந்து கடவு எண் (ஓடிபி) எதுவும் கேட்கப்படுவதில்லை. போலி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், தவறான வாட்ஸ் ஆப் செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். சந்தேகம் ஏதும் இருந்தால் காவல்துறையிடம் புகாா் அளித்திட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT