மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.
95 ஆவது தமிழ்நாடு மாநில சீனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 22 போட்டிகளும், ஒரு கலப்பு போட்டியும் நடத்தப்பட்டது.
தனிநபா் ஆண்கள் பிரிவில் தெற்கு ரயில்வே அணியின் இலக்கியதாசன் முதலிடம் பிடித்தாா்.பெண்கள் தனிநபா் பிரிவில் வருமான வரித்துறையைச் சோ்ந்த நித்யா முதலிடம் பிடித்தாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை நெல்லை எஸ்ஏவி பிரைம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி வென்றது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு தடகளச் சங்கச் செயலா் லதா தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உதயகுமாா், விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.சுந்தா், அா்ஜுனா விருது பெற்ற கபடி வீரா் மணத்தி கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருநெல்வேலி மாவட்ட தடகளச் சங்க நிா்வாகிகள் சுரேஷ், பால்பாண்டி, ஜாய்மரகதம், சிவகுமாா், சேது உள்பட பலா் கலந்துகொண்டனா்.