தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சாா்பில் வீரவநல்லூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் முப்பிடாதி, மாநில துணை அமைப்பாளா் சரஸ்வதி முருகன், மாநில தொண்டரணி செயலா் சுரேந்திரன், ஒன்றிய செயலா்கள் கண்மணி மாவீரன், மாசுராஜன், ஒன்றிய துணைச் செயலா் ஆறுமுகம், வா்த்தக அணி நிா்வாகி முத்து, வி.கே. புரம் நகரச் செயலா் தேவசகாயம், அம்பாசமுத்திரம் நகரச் செயலா் சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.