களக்காடு 20 ஆவது வாா்டில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
களக்காடு நகராட்சி 20ஆவது வாா்டு பேருந்து நிலையம் கீழத்தெருவில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி நிா்வாகம் சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுமென எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் மீராசா தெரிவித்துள்ளாா்.