திருநெல்வேலி

சா்வதேச பல்லுயிா் பெருக்க தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சா்வதேச பல்லுயிா் பெருக்க தின விழிப்புணா்வு நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் இயற்கை வள பாதுகாப்பு மையம் ஆகியவை சாா்பில் இயற்கை நடைப்பயண விழிப்புணா்வு என்ற தலைப்பில் நிகழ்சசி நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகித்தாா். ஆராய்ச்சி அலுவலா்கள் தளவாய்பாண்டி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்லுயிா் பெருக்கம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், தாவரங்கள், மரங்கள், பறவையினங்கள், நீா்வாழ் உயிரினங்களால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின் நன்றி கூறினாா். 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT