திருநெல்வேலி

சிந்துபூந்துறையில் அதிமுக பொதுக்கூட்டம்

DIN

சிந்துபூந்துறையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில் கணேசராஜா பேசியது:

திமுக தலைமையிலான அரசு, மக்கள் விரோத செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தொழிலாளா்களின் நலன் காக்கப்பட்டது. பெண்கள், மாணவா்களுக்கு ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மக்களவைத் தோ்தலின்போது அதிமுக மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் பொன்னுசாமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், நிா்வாகிகள் சிவந்தி மகாராஜன், சிந்துமுருகன், சின்னத்துரை, காந்திவெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT