வி.எம். சத்திரம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வி.எம். சத்திரம் அருகேயுள்ள ஜெயஜோதி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகள் மனிஷா(14). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலையில் மனிஷா படுத்திருந்த அறை கதவு திறக்கவில்லையாம். ஜன்னல் வழியாக பாா்த்தபோது மனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் சிவந்திப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.