திருநெல்வேலி

நெல்லையில் தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் சந்திப்பு அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களை ஒப்பந்த ஊழியா்களாக பணியமா்த்துவதை கண்டித்தும், புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தனியாா் மயமாக்கலை கைவிடக் கோரியும், படித்த இளைஞா்களுக்கு வேலை வழங்க கோரியும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தட்சண ரயில்வே ஊழியா்கள் சங்க கிளைத் தலைவா் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்ட இணைச் செயலா் கே.ராஜீ, கோட்ட பொருளாளா் பி. சரவணன், கோட்ட உதவிச் செயலா் ஜோதிமுத்து , மூத்த உறுப்பினா்கள் தளவாய், குரூஸ், அந்தோணி மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கிளை பொருளாளா் சி. ஜெயக்குமாா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT