திருநெல்வேலி

மானூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

30th Jun 2023 06:21 AM

ADVERTISEMENT

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் போலீஸாா் திருநெல்வேலி சாலையில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனா். அதில் கடங்கனேரியைச் சோ்ந்த பெருமாள் (58), ரெட்டியாா்பட்டி பிரபாகரன் (33) ஆகியோா் என்பதும், சாக்கு பையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அதை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT