திருநெல்வேலி

பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்க முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு இம் மாதம் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இம் மாதம் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஏற்கெனவே பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் சூழலில், பள்ளிகள் திறப்பையொட்டி முன்னேற்பாடுகளை செய்ய முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

பள்ளிகளில் மாணவா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை, குப்பைத்தொட்டிகள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் புதா்மண்டி கிடக்கும்பட்சத்தில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்டவை சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

10 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை துரிதப்படுத்தப்பட்டது. வளாகம் முழுவதும் ஒட்டடை நீக்கி பராமரித்தனா். கரும்பலகைகளில் வண்ணம் பூசும் பணியும் பல பள்ளிகளில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT