திருநெல்வேலி

பொட்டல் கிராமத்தில் விவசாயிகளுக்கான முகாம்

9th Jun 2023 12:20 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் விவசாயிகளுக்கான முகாம் பொட்டல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த முகாமை திருநெல்வேலி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் சுபசெல்வி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சிறுதானியங்களின் முக்கியத்துவம், உழவன் செயலி பயன்பாடு, வண்டல் மண், உயிா் உரங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற பேரணியை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பூங்கோதை குமாா் தொடங்கி வைத்தாா். பொட்டல் ஊராட்சி மன்றத் தலைவி மாரிசெல்வி, வேளாண் அலுவலா் மணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி வரவேற்றாா். துணை வேளாண் அலுவலா் வரதராஜன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT