களக்காடு அருகேயுள்ள மாவடியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா்பிளாக் சாலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
களக்காடு ஊராட்சி ஒன்றியம், மலையடிப்புதூா் ஊராட்சி மாவடியில், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ. ரூபி. மனோகரன் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி, திமுக மாவட்ட பொருளாளா் மு. ஜாா்ஜ் கோசல், மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.