திருநெல்வேலி

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக பாளை.யில் ஆா்ப்பாட்டம்

DIN

பாஜக எம்.பி. மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், சி ஐ டி யு, மாதா் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பாளையங்கோட்டை லூா்து நாதன் சிலை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் அருள் தலைமை வகித்தாா். காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்டத் தலைவா் செ.முத்துக்குமாரசாமி தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.முருகன், மாதா் சங்கம் முத்துமாரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் மாயகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் நிறைவுரையாற்றினாா். வழக்குரைஞா் கு.பழனி, செல்லதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT