ஓடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அனைத்துக் கட்சியினா் சாா்பில் களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற அஞ்சலியில், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.