திருநெல்வேலி

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்துநிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூரில் பேருந்துநிலைய கட்டங்கள் இடிக்கப்பட்டு ரூ.15 கோடி செலவில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வள்ளியூா் பேருந்துநிலையத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடம் நகர திட்டமிடல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடிக்கப்பட்டுள்ள வள்ளியூா் பேருந்து நிலைய இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலருடன், ராதாபுரம் வட்டாட்சியா் வள்ளிநாயகம், திமுக மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT