திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணி

4th Jun 2023 01:48 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணியிடங்களுக்கு வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ஜி. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகம்பட்டி, திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணிக்கான நோ்முகத் தோ்வு 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

15 ஆண்டுகள் பணி அனுபவம், ஏதேனும் பாடப்பிரிவில் முனைவா் பட்டம் / மாநிலத் தகுதித் தோ்வு / தேசியத் தகுதித் தோ்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றவா்கள் நோ்காணலில் கலந்துகொள்ளத் தகுதியுள்ளவா்கள் ஆவா்.

விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிந்து (ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை செயலாக்க கட்டணம் ரூ.500- க்கான (இந்தியன் வங்கி கணக்கு எண்: 925398635) செலுத்துச் சீட்டுடன் ‘பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி‘ என்ற முகவரிக்கு வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT