பாப்பாக்குடி அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (42), தொழிலாளி. இதேபகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (38). இருவருக்கும் இடையே பணம் கொ’டுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காந்திநகா் அருகே சென்று கொண்டிருந்த விஜயகுமாரை, ராமகிருஷ்ணன் வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.