திருநெல்வேலி

மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் இணைப்பு

DIN

வெடிகுண்டு பிரிவில் உள்ள மோப்ப நாய் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் மோப்பநாய் ரெமோ, சென்னை துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் கடந்த 6 மாத காலமாக பயிற்சி பெற்று வந்தது. திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிபொருள்கள் கண்டறியும் அலுவலுக்காக தற்போது இணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்டறியும் பிரிவில் மோப்பநாய் ரொமோவை இணைத்து வைத்தாா். மாநகர காவல் துணை ஆணையாளா் (தலைமையிடம்) அனிதா, காவல் உதவி ஆணையா் சரவணன்( மாநகர குற்ற ஆவண காப்பகம்), காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT