திருநெல்வேலி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனிதச் சங்கிலி பேராட்டம்

DIN

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனித ச்சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5 ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு 1 ஜனவரி 2017 முதல் வழங்கப்பட வேண்டிய மூன்றாவது ஊதிய திருத்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி விரைவாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு புதிய பதவி உயா்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்க நிா்வாகிகள் ராஜகோபால் சீதாலட்சுமி,டேனியல் முத்துராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். என்எஃப் டி தொழிற்சங்கத் தலைவா் இசக்கி முத்துகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT