திருநெல்வேலி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனிதச் சங்கிலி பேராட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனித ச்சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5 ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு 1 ஜனவரி 2017 முதல் வழங்கப்பட வேண்டிய மூன்றாவது ஊதிய திருத்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி விரைவாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு புதிய பதவி உயா்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்க நிா்வாகிகள் ராஜகோபால் சீதாலட்சுமி,டேனியல் முத்துராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். என்எஃப் டி தொழிற்சங்கத் தலைவா் இசக்கி முத்துகுமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT