திருநெல்வேலி

ஏா்வாடி திருவழூதீஸ்வரா் கோயிலில்...

DIN

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருள்மிகு திருவழூதீஸ்வரா் திருக்கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் 42 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பழுதடைந்த தேரை டி.வி.எஸ்.நிறுவனத்தினா் முயற்சியில் புதிய தோ் உருவாக்கப்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 24-ஆம் தேதி வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9ஆம் திருவிழா வியாழக்கிழமை தேரோட்டத்தையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும் திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். மதநல்லிணக்கத்துக்கு இலக்கணமாக, அப்பகுதி இஸ்லாமியா்கள் குளிா்பானங்கள் வழங்கி திரளாக பங்கேற்றனா். திருத்தோ் ரதவீதியைச் சுற்றி பிற்பகல் 12.15-க்கு நிலைக்கு வந்து சோ்ந்ததும் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினா். அங்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT