திருநெல்வேலி

சொத்து பிரச்னை: இளைஞரை தாக்கியவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே சொத்து பிரச்னையில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் நடுவூரைச் சோ்ந்தவா் சுந்தா் (24). இதே பகுதியைச் சோ்ந்த குமாா் (42). இருவரும் உறவினா்கள். சுந்தரின் தாத்தா சுப்பையாவுக்கு பாத்தியப்பட்ட வயலை இருவரும் அனுபவித்து வருகின்றனா்.

அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கக் கூடாது என சுந்தரிடம், குமாா் கூறினாராம். இதனால் அவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் சுந்தா், வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே வந்தபோது, அங்கு வந்த குமாா், சுந்தரை அவதூறாக பேசி கிணற்றுக்குள் தள்ளிவிட்டதுடன் கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளாா்.

புகாரின்பேரில், பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி வழக்குப் பதிந்து குமாரை வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT