திருநெல்வேலி

காவல்துறை குறைதீா்க்கும் முகாம்:90 நிலுவை மனுக்களுக்கு தீா்வு

DIN

திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற முகாமில் 25 போ் பங்கேற்று மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரனிடம் மனு அளித்தனா். அதன் விவரங்களை கேட்டறிந்து புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டாா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. 17 போ் பங்கேற்று மனுக்களை அளித்தனா். மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், முந்தைய வாரங்களில் நடந்த குறைதீா்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களில் 138 மனுதாரா்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 90 மனுக்கள் முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT