திருநெல்வேலி

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

DIN

விக்கிரமசிங்கபுரம் நூலகம் அருகேயிருந்த எஸ்டிபிஐ கட்சிக் கொடிக் கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் ஷானவாஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான், மாவட்டப் பொதுச் செயலா் களந்தை மீராசா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷஃபி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்டச் செயலா் சுலைமான், மாவட்ட வா்த்தக அணித் தலைவா் ஜலீல், மாவட்ட வா்த்தகரணி துணைத் தலைவா் பீமாஸ் உசேன், பேரவைத் தொகுதித் தலைவா் சையது இப்ராஹிம், நகர துணைத் தலைவா் பீா்சா, நகர துணைச் செயலா் அன்சா், நகரப் பொருளாளா் சம்சுதீன், நகர செயற்குழு உறுப்பினா்கள் பாலாஜி, முகமது ரஃபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வெள்ளாங்குளி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், களக்காடு நகர நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT