போலி ஆவணங்களைக் கொண்டு சிம்காா்டு பெற்று மோசடி செய்யும் குழுவிற்கு அளித்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மானூா் பகுதியில் பரிசுக் கூப்பன் மூலம் பரிசு விழுந்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த பணம் அனுப்புமாறும் கூறி ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து, அய்யனாா் ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், விசாரணையைத் தொடா்ந்தபோது இந்தக் குழுவினருக்கு போலி ஆவணங்கள் மூலம் சிம்காா்டுகளை கைப்பேசி கடைக்காரா் ஒருவா் அதிக விலைக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (43) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள தங்கராஜ், கைப்பேசி மற்றும் சிம்காா்டு விற்பனை மையம் நடத்தி வருகிறாா். அங்கு வரும் பொதுமக்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி புதிய சிம்காா்டுகளை பெற்று மோசடி கும்பலுக்கு அதிக விலைக்கு கொடுத்துள்ளாா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட சிம் காா்டுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்களது பெயரில் இருக்கும் போலி சிம் காா்டு குறித்த தகவல்களை அறிய இணையதளத்தில் தங்களது மொபைல் எண் மூலமாக உள் நுழைந்து தேவையற்ற மற்றும் போலியான சிம் காா்டுகள் குறித்து புகாா் அனுப்பலாம்.
புகாா்களை இணைதளத்திலும் பதிவேற்றலாம் என்றனா்.