காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்திலுள்ள காந்தி சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், மது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் அழகேசராஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரதிநிதிகள் சரத்கண்ணன், வா்த்தக அணி செயலா் ஞானசேகா், மானூா் தெற்கு ஒன்றியச் செயலா் இளஞ்செழியன், இளைஞரணி துணைச் செயலா் சரத்ராஜா, தச்சை பகுதிச் செயலா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்..