குலவணிகா்புரத்தில் நடந்து சென்ற காவல்துறை பெண் அதிகாரியிடம் நகையை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை குல வணிகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவிகா. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு நடந்துசென்றபோது, அவ்வழியே பைக்கில் வந்த மா்ம நபா் தேவிகா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.