வன்னிக்கோனேந்தல், பரப்பாடி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (ஜன.30) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக் குறிப்பு: வன்னிக்கோனேந்தல், பரப்பாடி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள் நகா், காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூா், துலுக்கா்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் சுற்றுவட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.