திருநெல்வேலி நகா் செஸ் அசோசியேஷன் சாா்பில் குடியரசு தின செஸ் போட்டிகள் தனியாா் மாலில் நடைபெற்றது.
இப்போட்டி ஜூனியா், சப் ஜூனியா், பொதுபிரிவு என 3 பிரிவுகளில், 6 சுற்றுகளில் நடைபெற்றது. 150 க்கு மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ரயில்வே நூலகா் எஸ்.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். எஸ்.சிதம்பர குற்றாலம் முன்னிலை வகித்தாா். தனியாா் மால் மேலாளா் விக்னேஷ் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுளை வழங்கினாா். ஏற்பாடுகளை செயலா் எம்.கருணாகரன், பொருளாளா் சுந்தரேஷன் ஆகியோா் செய்திருந்தனா்.