கல்லூா் சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஜன.30) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், வெள்ளாளன்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.