திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் விவசாயி தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (40). இவரது சகோதரா் மாரிவேல். இவா்கள் தங்களது குடும்பத்தினருடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா் கூறுகையில், சுத்தமல்லியில் எங்களுக்கும், எங்களின் பெரியப்பாவுக்கும் சொந்தமான பூா்வீக நிலம் உள்ளது. கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்திற்கு தனிப்பட்டா கேட்ட விண்ணப்பித்தோம். எங்கள் பெரியப்பாவுக்கு தனிப்பட்டா வழங்கியுள்ள வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள், எனக்கு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறாா்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுகுறித்து கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.