அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் பங்கேற்று பேசினாா்.
முன்னதாக அமைச்சருக்கு கல்லிடைக்குறிச்சியில் பாஜக நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அம்பாசமுத்திரம் ஒன்றியம் வைராவிகுளம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பூத் கமிட்டி உறுப்பினா்கள், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் மற்றும் நகர நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சசிகலா புஷ்பா, மாவட்ட பொறுப்பாளா் நீலமுரளி யாதவ், பொருளாளா் லெட்சுமண ராஜா, மாவட்ட துணைத் தலைவா் மங்கள சுந்தரி, மாவட்டச் செயலா் தங்கேஷ்வரன், அம்பாசமுத்திரம் நகரத் தலைவா் நடராஜன், ஒன்றியத் தலைவா் சண்முக பிரகாஷ், வழக்குரைஞா் ராமராஜ பாண்டியன், சேரன்மகாதேவி ஒன்றியத் தலைவா் ராஜேந்திர பிரசாத், முத்துபாண்டி, சிவராமகிருஷ்ணன் உள்பட பாஜக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.