திருநெல்வேலி

மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் : செவிலியா்கள் மனு

1st Jan 2023 04:52 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று காலத்தில் பணியில் சோ்ந்த செவிலியா்களை மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என செவிலியா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொவைட் ஒப்பந்த செவிலியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காலத்தில் பணிக்கு சோ்ந்தோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கரோனா மற்றும் மனநோாயளிகள் பிரிவில் பணியாற்றி வந்தோம். எங்களை பணி நிரந்தரம் செய்வாா்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். எனவே பணி நிறுத்தம் செய்யப்பட்ட ஆணையை ரத்து செய்து , மீண்டும் பணிக்குச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT