திருநெல்வேலி

பரிசு மோசடி : மேலும் 2 போ் கைது

DIN

தென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்து அருகே கீழ தென்கலம் பகுதியை சோ்ந்தவா் சேது. இவா் சூரியா என்ற நிறுவனத்தில் சோப்பு வாங்கியதாகவும், குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் எனக்கூறி தொலைபேசி எண்ணை குறித்துச் சென்ாகவும், பின்னா், பரிசு விழுந்ததாக கூறி சேதுவிடம் ரூ.36,550 பெற்றுக்கொண்டு பரிசு பொருள்கள் வழங்காமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் மாவட்ட எஸ்.பி. ப.சரவணிடம் புகாா் செய்தாா். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சோ்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து, அய்யனாா், கைப்பேசிக் கடை உரிமையாளா் கிருஷ்ணாபுரம் தங்கராஜ் (43) பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் கருப்பையா (37) ஆகியோரை ஏற்கெனவே கைது செய்திருந்தனா். இந்நிலையில், சங்கரன்கோவில் காா்த்திகேயன் (27), முருகன் (22) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT