திருநெல்வேலி

நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

DIN

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: திருநெல்வேலி மாநகரின் 23 ஆவது வாா்டில் ரூ. 42 லட்சத்தில் புதிய சாலையும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பள்ளிவாசல் மையவாடிக்கான சுற்றுச்சுவா் பணியும் நடைபெற்று வருகின்றன.

காட்சிமண்டபம் பகுதியில் வாருறுகால் பணி, ஆதம்நகா், பழையபேட்டை, காந்திநகா், அரசன்நகா், தெற்கு மவுன்ட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தச்சநல்லூா் மண்டலத்தில் ரூ.15.25 கோடி மதிப்பிலும், திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.11.84 கோடி மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டிகைப்பேரி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டவும், தச்சநல்லூா் ஆரம்பப் பள்ளியைத் தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மானூா் குளம் மட்டுமன்றி விஜயநாராயணம், திருக்குறுங்குடி உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான குளங்களில் தண்ணீா் இல்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன். திருநெல்வேலி தொகுதியை தன்னிறைவு தொகுதியாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT