பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் என்னைச் செதுக்கிய புத்தகம் என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. கல்லூரிப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் செளந்தர மகாதேவன் அறிமுகவுரையாற்றினாா். நடுவா்களாக பேராசிரியா்கள் சிவசங்கரி, செல்வராணி, ஜெயமேரி ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப்போட்டியில் ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி மாணவி ஸ்ரீ குட்டி முதலிடமும், ஸ்காட் கல்வியியல் கல்லூரி மாணவா் த.முத்தரசன் இரண்டாமிடமும் பிடித்தனா்.