தூத்துக்குடி

2.25 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: கடம்பூா் செ.ராஜு

20th May 2023 01:32 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 2.25 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு தலைமை வகித்தாா். அவா் பேசியது: தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் 2.25 லட்சம் புதிய உறுப்பினா்களை அதிமுகவில் இணைக்க வேண்டும். உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் கட்சியினா் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் அவா். மேலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT